Friday, September 08, 2006

மாறாத நினைவுகள்

காதல் பிரசவம்

பெண்ணவள் சுமக்கும் கருவின்
வளர்ச்சி...
எவரது கண்ணிலும் படாமல்
இருப்பதில்லை....

நான் சுமக்கும் கருவின்
வளர்ச்சி...
உன் கண்களுக்கு கூட
தெரியவில்லையா?

இல்லை! நிச்சயமாக இல்லை!

நீ என்னுள் காதல் கருவாக
வளர்வதை
முழுவதும் உணர்ந்தவள்....

கருவினுள் வளர்ந்து வரும்
குழந்தைக்கு....

பிடித்தது! பிடிக்காதது!

எதுவென அறிந்து உண்ணும்
அன்னையாய்...
நான் நடந்து கொண்டதை
ரசித்தவள் நீ....

கருவினுள் சுகமாய் இருப்பதை
என்றாவது ஒருநாள்....
காலால் உதைத்து உண்ர்த்தும்
குழந்தையைப் போல்...

நீ உதிர்க்கும் ஒரிரு
வார்த்தைக்ள்...
நீ காணும் இன்பத்தை
எனக்குணர்த்தும்....

பத்து திங்கள் கழிந்த பிறகும்....
வெளியுலகை சந்திக்க பயந்து....
கருவினிலேயே இருக்க விரும்பியதாம்
குழந்தை!

குழந்தையும் உன்னைப் போல்
அறியவில்லை!...

தக்க தருணத்தில் வெளி
வந்தால்தான்...
தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
நன்மையென....

தனக்குள் பாதுகாப்பாக சுமக்கும்
போதே!
அரவணைத்து, கருவின் உணர்வறிந்து
நடந்தவளுக்கு....
கைகளில் வந்ததும் அரவணைக்கும்
பக்குவம் தெரியுமடி....

என் காதல் கருவாய்
இருப்பவளே!

இதனை உணர்ந்து....

எப்பொழுது நீயும் எனக்குத் தருவாய்
பிரசவ வலி?